Tuesday 26 February 2013

துணைவியா? துறவியா?


மனித வாழ்வில் மிக முக்கியமான மற்றும் மட்டற்ற ஆனந்தத்தைத் தரக் கூடிய திருமணம் என்ற மகிழ்ச்சியான நிகழ்விற்குப் பிறகு குடும்ப வாழ்வில் மிகவும் அதிகமாக சந்திக்கப்படும் பிரச்சனை மாமியார், மருமகள் பிரச்சனை தான். 

இன்றைய இயந்திர வாழ்க்கையில் கூட்டுக் குடும்ப முறை வெகுவாகக் குறைந்து வருவதால் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தளவிற்கு இப்பிரச்சனை இன்று இல்லை என்றாலும் பரவலாக இப்பிரச்சனை அவ்வப்போது தலை தூக்கத் தான் செய்கிறது. பெண்கள் சம்பந்தப்பட்ட இப்பிரச்சனையில் அதிகமாகப் பாதிக்கப்பட்டு நிம்மதியை இழக்க நேரிடுவது ஆண்கள் தான்.

வாழ்வின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் அழகான தீர்வுகளை தரக் கூடிய இஸ்லாமிய மார்க்கம் இப்பிரச்சனைக்கும் தெளிவான முடிவை சொல்லத் தான் செய்கிறது. இந்த மாமியார், மருமகள் பிரச்சனைக்கு மிக முக்கியக் காரணமாக அமைவது மாமியார்களின் அணுகுமுறை தான்.

பல துயரங்களைச் சுமந்து பெற்று, வளர்த்தெடுத்த தன்னுடைய பிள்ளை தன்னை விட்டுப் பிரியாமல் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தன் பிள்ளை அவனுடைய மனைவியுடன் பாசத்தோடு இருப்பதை ஒரு தாய் பரவலாக ஏற்றுக் கொள்வதில்லை. தன் மனைவி மீது கொண்டுள்ள பாசம் எங்கே தன்னைக் கவனிப்பதை விட்டும் அவனுடைய கண்களை மறைத்து விடுமோ என்ற அச்சம் தான் காரணம். 

ஆனால் படைத்த வல்ல ரஹ்மானோ இயல்பாகவே பெண்கள் மீது ஆண்களை மோகம் கொள்ளக்கூடியவர்களாக படைத்திருக்கிறான். மேலும் குறிப்பாக தன்னுடைய துணைவியின் மீது பாசத்தை ஏற்படுத்தி தந்தவனும் அவனே.

பெண்கள், ஆண் மக்கள், திரட்டப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், அழகிய குதிரைகள், கால்நடைகள், மற்றும் விளை நிலங்கள் ஆகிய மன விருப்பம் ஏற்படுத்தும் பொருட்களை நேசிப்பது மனிதர்களுக்கு கவர்ச்சியாக்கப்பட்டுள்ளது.
(அல்குஆன் 3:14)

"அவனே உங்களை ஒரே ஒருவரி-ருந்து படைத்தான். அவரி-ருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்'' என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.
(அல்குஆன் 7:189)

நீங்கள் அமைதி பெற உங்களி-ருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குஆன் 30:21)

எனவே ஒரு ஆண்மகன் தன் மனைவியுடன் மகிழ்ச்சியோடு இருக்கும் ஏற்பாட்டை வல்ல ரஹ்மான் தான் ஏற்படுத்தியிருக்கிறான். இது மட்டுமில்லாமல் தன்னுடைய கணவனை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பு ஒரு நல்ல மனைவிக்கு உள்ளது என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.
அறிவிப்பவர்: உமர் (ரலீ)
நூல்: அபூதாவூத் 1412

எனவே கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பதைத் தடுப்பதற்காக, தேவையற்ற கட்டுப்பாடுகளை விதிக்காமல் தன்னுடைய மருமகளை எல்லா சுகங்களையும் இழந்து துறவியாக வாழச் செய்யாமல் இருந்தால் இப்பிரச்சனை பெரும்பாலும் குறைந்து விடும். இல்லையெனில் தன்னுடைய மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழத் தடையாக இருப்பதால் மகனே தாயை வெறுத்து, அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்ய மறுக்கும் மோசமான நிலை கூட ஏற்பட்டு விடலாம்.

Sunday 24 February 2013

திருஷ்டிக்காக குழந்தைகளின் கன்னத்தில் கருப்புப் பொட்டை வைக்கலாமா ?


கேள்வி: திருஷ்டிக்காக குழந்தைகளின் கன்னத்தில் கருப்புப் பொட்டை தாய்மார்கள் வைக்கிறார்கள். மார்க்கத்தின் அடிப்படையில் இது தவறா?
பதில்: முஸ்லிம்கள் அனைவரும் எந்த ஒரு துன்பம் வந்தாலும் இன்பம் வந்தாலும் அது அல்லாஹ்வின் மூலம் தான் வருகிறது என்று உளமாற நம்ப வேண்டும். இந்த நம்பிக்கை வந்து விட்டால் இது போன்ற மூடப் பழக்க வழக்கங்கள் தன்னால் ஓடிவிடும். குழந்தைக்குப் பொட்டு வைப்பதால் கண் திருஷ்டி வராது என்று அல்லாஹ்வின் விதியை மறந்தவர்கள் தான் நினைப்பார்கள். 

தாயத்து கட்டியிருப்பவனை நபி (ஸல்) அவர்கள், இணை வைப்பாளன் என்று கூறினார்கள். தீமைகளை அகற்றுபவன் அல்லாஹ் என்பதை மறந்து விட்டு, சாதாரண கயிறு அகற்றுவதாக அவன் நினைத்தது தான் இதற்குக் காரணம்.

இது போலவே அல்லாஹ்வின் மேல் வைக்க வேண்டிய நம்பிக்கையை கருப்புப் பொட்டின் மீது வைப்பதால் இதுவும் தடுக்கப்பட்டதாகி விடுகிறது. அல்லாஹ் பின்வரும் வசனங்களில் அவன் நாடினால் தான் தீமைகளோ அல்லது நன்மைகளோ ஏற்படும் என்று கூறுகிறான்.
"அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 9:51)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. (அல்குர்ஆன் 57:22)

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழி காட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 64:11)

மேலும் இச்செயல் மாற்றார்கள் கடைப்பிடிக்கும் மூடப் பழக்க வழக்கம். இஸ்லாத்தில் மூடநம்பிக்கைகளுக்கு அணுவளவும் இடம் கிடையாது. அரபுகளிடத்தில் காணப்பட்ட ஏராளமான மூடநம்பிக்கைகளை இஸ்லாம் தான் ஒழித்தது. இஸ்லாம் எவ்வாறு மூடநம்பிக்கைகளை களைந்தெடுத்தது என்பதைப் பின்வரும் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. 
மடமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஃபாவை) வலம் வந்தார்கள். ஹும்ஸ் கிளையார்களைத் தவிர.
அறிவிப்பவர்: உர்வா (ரலி)
நூல்: புகாரி (1665)


அன்சாரிகள் ஹஜ் செய்து விட்டு வரும் போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல் வழியாக செல்ல மாட்டார்கள். மாறாக வீட்டின் பின் வாசல் வழியாக வருவார்கள். அப்போது அன்சாரி களைச் சார்ந்த ஒருவர் (முன்)  வீட்டின் வழியே சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது, "உங்கள் வீடுகளுக்குப் பின் வாசல் வழியாக செல்வது நன்மையான காரியமன்று. மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். ஆகவே வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்'' (2:189) என்ற இறை வசனம் அன்சாரிகளாகிய எங்கள் விஷயத்தில் இறங்கியது.
அறிவிப்பவர்: பராஉ (ரலி)
நூல்: புகாரி (1803)

அல்பஹீரா என்பது (பால் கறக்கக் கூடாத ஒட்டகம் என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டகத்தின் பெயராகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள். சாயிபா என்பது அரபுகள் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேய விட்ட ஒட்டகமாகும். ஆகவே அதன் மேல் சுமை ஏதும் சுமத்தப்படாது.
நபி (ஸல்) அவர்கள், "குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் பின் ஆமிர் பின் லுஹை என்பவர் நரகத்தில் தன் குடலை இழுத்துக் கொண்டு சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர் தான் முதன் முதலில் சாயிபா ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து விட்டவர்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (3521) 

இது போன்ற ஏராளமான மூட நம்பிக்கைகளை இஸ்லாம் களைந்து எடுத்திருக்கின்றது. எனவே திருஷ்டிக்காகப் பொட்டு வைப்பது என்பது இஸ்லாத்திற்கு முரணான மூட நம்பிக்கை. முஸ்லிம்கள் இதை அணுவளவும் உண்மை என்று நம்பி விடக் கூடாது.

லிப்ஸ்டிக் பயன்படித்துக் கொண்டு பெண்கள் வெளியில் செல்லலாமா ?


பர்தா அணிந்து, மார்க்கம் சொல்கின்ற முறையில் வெளியில் செல்லக்கூடிய பெண்கள் அலங்காரமாக லிப்ஸ்டிக் போன்ற பொருட்களைப் பயன்படுத்திக் கொண்டு செல்லலாமா?
அந்நியர்கள் இருக்கும் இடங்களுக்குச் செல்லும் பெண்கள் இவ்வகையான கூடுதல் அலங்காரங்களைத் தவிர்க்க வேண்டும். கணவன் மற்றும் கீழ்க்கண்ட வசனங்களில் கூறப்படுபவர்கள் இருக்கும் இடங்களில் மட்டுமே கூடுதலான அலங்காரங்களைப் பயன்படுத்த வேண்டும். 

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.
(அல்குர்ஆன் 24:31)




Friday 22 February 2013

பெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்) துûணியை தலையில் போட்டுக் கொள்வதும்


பெண்களில் பலர் பாங்கு சொல்லும் போது (முந்தானையின்) துûணியை தலையில் போட்டுக் கொள்வதும் பாங்கு முடிந்த பிறகு துணியை எடுத்து விடுவதுமாக இருக்கிறார்கள். இவ்வாறு செய்வது சரியா?

அந்நிய ஆண்களுக்கு முன்னால் பெண்கள் தலையை மறைத்து இருக்க வேண்டுமென நபிகளார் கட்டளையிட்டுள்ளார்கள். (முஸ்லிம் 5235)

ஆனால் பாங்கு சொல்லும் போது தலையில் துணியைப் போட வேண்டுமென கட்டளையிடவில்லை. சில ஊர்களில் ஆண்களும் கூட பாங்கு சொல்லும் போது தலையில் துணியைப் போட்டு, பாங்கு முடிந்தவுடன் துணியை எடுத்து விடுகிறார்கள். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரமா




மார்க்கத்தில் மெட்டி அணிவது கூடுமா? மெட்டி அணிவது மாற்று மதக் கலாச்சாரம் என்று கூறுகின்றார்களே! இதற்கு விளக்கம் அளிக்கவும்.

பெண்கள் திருமணமானதற்கு அடையாளமாகக் கால் பெருவிரலுக்கு அடுத்த விரலில் அணிந்து கொள்ளும் மோதிரம் போன்றுள்ள அணிகலனுக்கு மெட்டி என்று கூறுகின்றனர். 

இந்த அணிகலனை, பெரும்பாலும் மாற்று மதத்தில் திருமணமானதற்கு அடையாளமாக அணிகின்றனர். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் திருமணத்திற்கு அடையாளமாக இதை அணியவில்லை. சாதாரண அணிகலனாக அணிந்துள்ளனர்.

"நபி (ஸல்) அவர்கள் ஒரு பெருநாள் அன்று பெண்கள் பகுதியில் தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டபோது மோதிரங்களையும் மெட்டிகளையும் பிலாலின் ஆடையில் அப்பெண்கள் போடலானார்கள்'' என்று புகாரி (979, 4895) ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

மெட்டியை மதச்சடங்காக இல்லாமல் அது ஒரு அணிகலன் என்ற அடிப்படையில் அணிந்து கொள்ளலாம். எப்படி ஒரு மோதிரத்தை விரும்பிய போது போட்டுக் கொண்டு விரும்பிய போது கழற்றி விடுகிறோமோ அதே அடிப்படையில் இதையும் பயன்படுத்தலாம். மேலும் திருமணம் ஆனவர்கள் என்றில்லாமல் அனைவரும் இதைப் பயன்படுத்தலாம்; எந்த விரலிலும் அணியலாம் என்ற அடிப்படையில் போட்டுக் கொள்வதில் தவறில்லை.


Thursday 21 February 2013

வீர மங்கை அஸ்மா (ரலி)


மதீனாவின் மேற்பகுதியில் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை (சிலுவையில் அறைப்பட்டவராக) நான் கண்டேன். குறைஷிகள் அவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அந்த இடத்தில் நின்று, "அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்! அபூகுபைபே! உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்!'' என்று கூறி விட்டு, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! இதை (ஆட்சிப் பொறுப்பை) விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா? இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா? இதை விட்டும் நான் உங்களைத் தடுக்கவில்லையா?'' என்று கேட்டார்கள்
.
பிறகு, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் நோன்பாளியாகவும் தொழுபவராகவும் உறவினர்களுடன் இணங்கி வாழக் கூடியவராகவும் நான் உங்களை அறிந்துள்ளேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! உம்மை எந்தச் சமுதாயம் தீயவனாகக் கருதுகிறதோ அந்தச் சமுதாயமே கெட்ட சமுதாயமாகும்'' என்று கூறி விட்டு இப்னு உமர் (ரலி) சென்று விட்டார்கள்.

இப்னு உமர் நின்ற செய்தி ஹஜ்ஜாஜுக்குத் தெரிய வந்த போது அங்கு ஆளனுப்பி பேரீச்ச மரத்திலிருந்து அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை இறக்கச் செய்தான். பின்னர் அவரை யூதர்களின் மண்ணறையில் போட்டான்.
பின்னர் அவர்களது தயார் அஸ்மா (ரலி) அவர்களிடம் ஹஜ்ஜாஜ் ஒரு ஆளை அனுப்பி, தன்னிடம் வருமாறு சொல்லியனுப்பினான். அதை ஏற்க அஸ்மா (ரலி) மறுத்து விட்டார்கள்.

பின்னரும் ஆளனுப்பி, "வர மறுத்தால் உன் கொண்டையைப் பிடித்து இழுத்து வருபவரை அனுப்புவேன்'' என்று சொல்லியனுப்பினான். அப்போதும் மறுத்து, "என் கொண்டையைப் பிடித்து இழுத்து வரும் நபரை அனுப்பும் வரை உன்னிடம் வரமாட்டேன் (முடிந்தால் செய்து பார்)'' என்றார்கள்.

"என் காலணிகளைக் காட்டுங்கள்'' என்று கூறி காலணியை அணிந்து கொண்டு விரைந்து சென்றான். அஸ்மா (ரலி) அவர்களின் வீட்டில் நுழைந்து "அல்லாஹ்வின் விரோதியை என்ன செய்தேன் என்று பார்த்தாயா?'' என்றான்.
அதற்கு அஸ்மா (ரலி), "நீ அவனது உலக வாழ்க்கையை நாசமாக்கி, உன் மறுமை வாழ்க்கையை வீணாக்கி விட்டாய்'' என்று கூறினார்கள். பின்னர், "சகீஃப் என்ற பகுதியிலிருந்து ஒரு பொய்யனும், ஒரு அழிவை ஏற்படுத்துபவனும் வருவான்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பொய்யனை நாங்கள் பார்த்து விட்டோம். அழிவை ஏற்படுத்துபவன் நீதான் என்று எண்ணுகிறேன்'' என்று அஸ்மா (ரலி) கூறினார்கள். இதைக் கேட்ட ஹஜ்ஜாஜ் எந்தப் பதிலும் சொல்லாமல் சென்று விட்டான்.
அறிவிப்பவர்: அபூ நவ்ஃபல்
நூல்: முஸ்லிம் (4617)

ஹிஜ்ரீ 63ஆம் ஆண்டு யஸீத் பின் முஆவியா இறந்த போது அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டாம் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் தடுத்தார்கள். இஸ்லாமியப் பகுதிகள் அனைத்திலும் அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை ஏற்றுக் கொண்டனர். ஆனால் மர்வான் பின் ஹகம் மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் சிரியா, எகிப்து பகுதியை கைப்பற்றினார்.
அவருக்குப் பின்னர் அப்துல் மலிக் பின் மர்வான் பொறுப்பேற்றார். அவர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவனை அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களை எதிர்த்துப் போராட அனுப்பி வைத்தார். ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் என்பவன் அவர்களைப் பிடித்து சிலுவையில் ஏற்றினான். இந்தச் சம்பவம் தான் மேற்கூறிய ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிகச் சிறந்த நபித் தோழராக விளங்கிய அப்துல்லாஹ் பின் சுபைர் (ரலி) அவர்களின் தாயார் தான் அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள்.
நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களில் முதலிடம் பிடித்த அபூபக்ர் (ரலி) அவர்களின் புதல்வியார் அஸ்மா (ரலி). இவர் ஆயிஷா (ரலி) அவர்களின் சகோதரி ஆவார். எனினும் இருவருக்கும் தாய் வேறு, தந்தை ஒன்று. ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் பெயர்: உம்மு ரூமான், அஸ்மா (ரலி) அவர்களின் தாயார் பெயர்: குதைலா. இவர் இஸ்லாத்தை ஏற்றிருக்கவில்லை.

நபித்தோழியர்களில் மிகச் சிறந்தவராக அஸ்மா (ரலி) திகழ்ந்தார்கள். இஸ்லாத்தை ஆரம்ப காலத்திலேயே ஏற்றவராகவும் இருந்தார்கள். வீரமிக்க பெண்மணியாகவும் திகழ்ந்தார்கள்.
அவர்களின் வீரத்திற்கு நாம் மேற்கூறிய ஹதீஸே சிறந்த சான்றாகும். கொடுங்கோலன் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படும் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபிடமே தன் வீரத்தை வயது முதிர்ந்த காலத்திலும் எடுத்துக் காட்டிய வீரப் பெண்மணி அஸ்மா (ரலி).
தன் மகனை பேரீச்ச மரத்தில் சிலுவையில் அறைந்து கொடுமைப்படுத்தியவன் அழைத்த போது மறுத்து, மீண்டும் எச்சரித்து அழைத்த போதும், "முடிந்தால் பார்த்துக் கொள்' என்று சொன்ன வீர மங்கை அஸ்மா (ரலி) அவர்களுக்கு அப்போது கண் பார்வை கூட இல்லை. நூறு வயதை எட்டிய அவர்களுக்கு ஒரு பல் கூட விழவில்லை என்பதும் புத்தி தடுமாறவில்லை என்பதும் கூடுதல் சிறப்பு.

தன்னையும் கூட கொடுமைப்படுத்தலாம் என்பதை அறிந்திருந்த அஸ்மா (ரலி) அவர்கள் அவனுக்குப் பயப்படாமல் கொடுங்கோலனுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழியைச் சுட்டிக்காட்டி, "அழிவை ஏற்படுத்துபவன் நீ தான்' என்று தெளிவாகக் கூறிய வார்த்தைகள் அவர்களின் வீரத்தின் வெளிப்பாடு!

"அநீதி இழைக்கும் மன்னனுக்கு முன்னால் சத்தியத்தைச் சொல்வது சிறந்த ஜிஹாத்' என்ற நபிமொழிக்கு ஏற்ப சத்தியத்தை தைரியமாகச் சொன்ன அஸ்மா (ரலி) அவர்களைப் போல் அநீதிக்கு எதிராக பெண்களும் போராட களத்தில் இறங்க வேண்டும்




பெண்கள் புருவமுடியை நீக்கலாமா??????????


புருவ முடிகளை அகற்றி இறைவன் படைத்த படைப்பில் மாற்றம் செய்வதை 

மார்க்கம் தடைசெய்துள்ளது. இக்காரியத்தை அழகிற்காக செய்தாலும் தவறு தான்.



பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், புருவ முடிகளை

அகற்றக் கேட்டுக்கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்துப் 

பல்வரிசையைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) இறைவன் அüத்த 

உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின்சாபம் 

உண்டாகட்டும்! என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல் : புகாரி (5931)

தபர்ருஜ் என்றால் என்ன?


பெண்கள்!!!!!
அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான்.‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள்.

தபர்ருஜ் என்றால் என்ன?

‘பெண்கள் தங்களின் அழகு மற்றும் அலங்காரங்களை அந்நிய ஆடவருக்கோ அல்லது மஹர்ரமற்றவர்களுக்கோ (திருமணம் செய்ய ஆகுமான உறவினர்கள் மற்றும் பிறர்) வெளிக்காட்டுவதும், பொது இடங்களில் மேக்கப்புடன் தங்களை அலங்கரித்துக் கொண்டு தோன்றுவதும், அந்நிய ஆண்களின் இச்சையைத் தூண்டும் வேறு எந்த விதமான காரியங்களைச் செய்வது தபர்ருஜ் ஆகும்’

தபர்ருஜ் செய்வதனால் விளையும் தீமைகள்:-

இமாம் அத்தாபி அவர்கள் தங்களின் ‘அல் கபாயிர்’ (பெரும் பாவங்கள்) என்ற நூலில் கூறுகிறார்கள்: ‘பெண்கள் சபிக்கப்படுவதற்கான மற்ற விஷயங்களில் மறைத்துள்ள தங்களுடைய அலங்காரத்தை வெளிக்காட்டுவதும், வெளியே செல்லும்போது வாசனை திரவியங்கள் உபயோகிப்பதும், வண்ணமயமான அல்லது சிறிய வெளிப்புற ஆடை அணிவதும் அடங்கும். தபர்ருஜ் என்பது இது அனைத்தையும் உள்ளடக்குகின்றது. மேன்மைக்குரிய அல்லாஹ் தபர்ருஜையும் அதைச் செய்யும் பெண்களையும் வெறுக்கிறான்’

தபர்ருஜ் மோசமானது:-


அல்லாஹ்வின் தூதரவர்கள் தபர்ருஜை ஷிர்க், விபச்சாரம், திருட்டு போன்ற மற்ற மோசமான செயல்களுடன் சமமாக்கி சொல்கின்ற அளவுக்கு தபர்ருஜ் மோசமானது.

பர்தா அணிவதன் நோக்கம்:-

ஒரு பெண் பர்தா அணிவதன் நோக்கம், தன்னுடைய உடல் பாகங்களையும், தன்னுடைய அழகு அலங்காரங்களையும் மறைப்பது தான். ஆனால் அந்த பர்தாவே வண்ணமயமானதாகவும், கண்ணைக் கவரக்கூடியதாகும் இருப்பின், அதை அணிவதின் நோக்கத்தையே அர்த்தமற்றதாக்கி விடுகிறது.

பர்தா அணியும் முறை:-


அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘பர்தாவானது அதற்குக் கீழுள்ள ஆடைகளை மறைத்திட வேண்டும். ஒரு முஸ்லிம் பெண்மணி தொழும்போது உபயோகிக்கும் உடையும் இவ்வாறே இருக்க வேண்டும். மெல்லிய, உள்ளே உள்ளவைகளை காண்பிக்கக்கூடிய உடைகள் ஆண்களை கிளர்ச்சிக்குள்ளாக்குகின்றன. மெல்லிய உடையை அணியும் பெண்கள் உடை அணிந்தும் அணியாதவர்கள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

உடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்:-

இறுக்கமான அல்லது மெல்லிய உள்ளே உள்ளவைகளை காண்பிக்கும் அல்லது மறைப்பதை விட அதிகம் வெளிப்படுத்திக் காண்பிக்கும் உடைகளை அணிபவர்கள் உடை அணிந்தும் அணியாதது போன்றவர்களாவார்கள்.

நபி (ஸல்) அவர்களால் சபிக்கப்பட்டவர்கள்:-


நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘உடை அணிந்தும் அணியாதது போன்றும் ஒட்டகத்தின் மிதிலைப் போன்று தங்களின் தலையில் ஏற்படுத்திக் கொண்டு பெண்கள் என் சமுதாயத்தில் தோன்றுவார்கள். அவர்களை சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் ஆவார்கள்’ ஆதாரம்: தபரானி.

சுவர்க்கத்தின் நறுமணத்தைக் கூட நுகராத பெண்கள்:-

மற்றொரு நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த பெண்களை (அதாவது மேற்கூறப்பட்ட பெண்களைக்) குறிப்பிட்டுக் கூறுகிறார்கள்: ‘அவர்கள் சுவர்க்கத்தில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், அதன் சுகந்தத்தைக் கூட நுகர மாட்டார்கள். அதன் சுகந்தமோ நீண்ட தூரத்திற்கு பரவக்கூடியதாகும். அதாவது அவர்கள் சுவர்க்கத்தை விட்டு மிக அதிக தொலைவில் இருப்பார்கள்’ (ஸஹீஹ் முஸ்லிம்).

நாணம் விலகின் ஈமானும் விலகிவிடும்:-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘நாணமும் ஈமானும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததாகும். ஒன்றை விட்டு ஒன்று விலகி விடுமெனில் மற்றொன்றும் அத்துடன் விலகிவிடும்’ ஆதாரம்: ஹாக்கிம்.

பொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்களைப் பூசிக்கொண்டு பெண்கள் செல்லக்கூடாது:-

பொது இடங்களுக்கு செல்லும்போது வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை ஒரு பெண் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். தங்கள் வீடுகளுக்கு அப்பால் வாசனைத் திரவியங்கள் உபயோகிப்பதை தடுக்கும் பல நபிமொழிகள் உள்ளன.

Wednesday 20 February 2013

பிறந்த நாள் கொண்டாடலாமா?



பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை.
இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

மேலும் இக்கொண்டாட்டம் அறிவுக்கு மாற்றமான செயலாகவும் அமைந்துள்ளது. மனிதனுடைய பிறப்பில் அவனுடைய சாதனை எதுவும் இல்லை. ஒவ்வொரு மனிதனுடைய பிறப்பும் அவன் வளர்வதும் இறைவனுடைய அருளாலே நடந்துகொண்டிருக்கின்றது. எனவே இதில் மனிதன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்வதில் என்ன தத்துவம் அடங்கியிருக்கின்றது?



மேலும் இறைவன் நமக்கு விதித்த காலக்கெடுவில் ஓராண்டு கழிந்துவிட்டது எனக் கவலைப்படுவதைத் தவிர பிறந்த நாளில் சந்தோஷப்படுவதற்கு என்ன இருக்கின்றது?

இது பிற்காலத்தில் கிரிஸ்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட கொண்டாட்டமாகும். கிரிஸ்தவர்களின் கெட்ட கலாச்சாரத்தை நாம் பின்பற்றக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

3456حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودَ وَالنَّصَارَى قَالَ فَمَنْ رواه البخاري

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறினார்கள் :

''உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்கலின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ''அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா  நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''வேறெவரை?'' என்று பதிலலித்தார்கள்.

புகாரி (3456)

நபி (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் பிறந்த தினம் கொண்டாடியதுமில்லை அவ்வாறு கொண்டாடுமாறு ஏவியதுமில்லை. இந்த நடைமுறை மார்க்கத்தில் புதிதாக புகுந்த பித்அத் ஆகும்.

"செய்திகளில் உண்மையானது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் அழகியது முஹம்மதின் வழியாகும். மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டதாகும்.புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் பித்அத் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் சேர்க்கும்" என்று நபிகள் நாயகம் ஸல் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி), நூல்: நஸயீ 1560)

சிலர் பிறந்த நாள் கொண்டாடுவது தவறு என்று தெரிந்தும் வாழ்த்துவது தவறில்லை என்று நினைக்கிறார்கள்.இந்த வாதம் அவர்களுடைய அறியமயையே காட்டுகிறது.ஒரு தவறை செய்பவருக்கும் அந்த தவறை ஆதரிப்பவர்களுக்கும் அதற்க்கு உண்டான தண்டனை வழங்கப்படும் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.அதோடு அல்லாஹ் நின்று விடாமல் யாராவது தவறு செய்வதை கண்டால் அதை தடுக்க வேண்டும் என்றும் ஆணையிடுகிறான்.

صحيح مسلم حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ ح...  وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ كِلاَهُمَا عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ - وَهَذَا حَدِيثُ أَبِى بَكْرٍ - قَالَ أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ. فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ. فَقَالَ أَبُو سَعِيدٍ أَمَّا هَذَا فَقَدْ قَضَى مَا عَلَيْهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ.

உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும். முடியாவிட்டால் தமது நாவால் (தடுக்கட்டும்) அதுவும் முடியா விட்டால் தமது உள்ளத்தால் (வெறுத்து ஒதுங்கட்டும்) இந்த நிலையானது இறை நம்பிக்கையின் பலவீனமா(ன நிலையா)கும்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

(அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) , நூல்: முஸ்லிம் 70)

எனவே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு நீங்கள் பிறரை அழைத்தாலும் பிறரை அழைக்காமல் உங்கள் குடும்பத்தினர் மட்டும் கொண்டாடினாலும் அது தவறு. இதை நாம் கைவிட வேண்டும்

பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுதல்



ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டார். அவர் அதி­ருந்து சாப்பிட்டவில்லை. பிறகு அவர் எழுந்து சென்று விட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ''இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்தி­ருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 1418, 5995

குழந்தைச் செல்வம் நமக்கு கிடைக்கும் மிகப் பெரிய பேறு. இந்த பாக்கியம் இல்லாதவர்கள் இன்று பல கோடிகளை கொட்டிக் கொடுத்தும் குழந்தை கிடைக்காமல் பரிதவிக்கும் நிலையை காண்கிறோம். அதே நேரத்தில் குழந்தையும் கிடைத்து, அவர்களை வளர்ப்பதற்குப் போதிய பொருளாதாரம் இல்லையென்றால் பெற்றோரின் கதியும் அவ்வளவு தான்.

பல குழந்தைகளைப் பெற்றெடுத்து பண வசதியின்மையால் மிகப்பெரும் சிரமத்திற்கு ஆளவோர் இந்தியாவில் பெருமளவில் இருக்கின்றனர். குழந்தைகளை சரி வர வளர்க்க முடியாமல் படிக்க வைக்க முடியாமல் திணறும் பெற்றோர்கள், கடன் சுமை அதிகரித்து, தற்கொலை என்ற மாபாதகமான செயல்களுக்குச் சென்று விடுகின்றனர். இதனால் நிரந்தர நரகத்திற்குச் செல்லும் அவல நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது.


குறிப்பாகப் பெண் குழந்தைகளைப் பெற்று விட்டால் பெற்றார்களுக்குப் பெரும் சிரம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை ஒழுக்க மிக்கவர்களாக வளர்த்து திருமணமும் செய்து வைப்பது இன்றைய கால சூழ்நிலையில் மிகப் பெரிய சிரமமாகப் பலர் கருதுகின்றனர்.

இன்னலாகக் கருதப்படும் இந்தப் பெண் குழந்தைகள், இவ்வுலகில் பாரமாக இருந்தாலும் அவர்களை நல்ல முறையில் வளர்த்து நல்லொழுக்கத்தைக் கற்றுக் கொடுத்து அவர்களை வளர்ப்பதில் சிரமத்தை ஏற்றுக் கொண்டால் நாம் செய்யும் இந்தக் காரியத்துக்குக் கைமாறாக மறுமை நாளில் இந்தக் குழந்தைகள் நம்மை நரகத்திற்குப் போக விடாமல் தடுக்கும் திரையாக இருந்து சொர்க்கத்திற்கு அனுப்புபவர்களாக மாறுவார்கள். இக்கருத்தைத் தான் மேற்கூறிய நபிமொழி எடுத்துரைக்கிறது.

ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் அவர்கள் ஒன்பது பெண் குழந்தைகளை விட்டு விட்டு இறந்தார்கள். இவர்கள் அனைவரையும் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஜாபிர் (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டது. இதனால் அவர்கள் கன்னிப் பெண்ணை திருமணம் செய்யாமல் விதவைப் பெண்ணை திருமணம் செய்தார்கள். விதவைப் பெண்ணுக்கு அனுபவம் இருக்கும். தம் சகோதரிகளை நல்ல முறையில் பராமரிப்பார், ஒழுக்கம் கற்பிப்பார் என்ற நம்பிக்கையில் கன்னிப் பெண்ணை விட்டுவிட்டு விதவைப் பெண்ணை தேர்வு செய்தார்கள். இதை நபிகளார் அவர்களும் ஏற்றுக் கொண்டு அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள். (பார்க்க: புகாரி 4052, 5367, 2967)

அறியாமைக் காலத்தில் தான் பெண் குழந்தைகள் பிறப்பது கெட்ட சகுனமாகக் கருதப்பட்டது. மேலும் அவர்களை உயிருடன் புதைக்கும் கொடுமையும் நிழந்தது.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப் பட்டவனாக ஆகி விடுகிறான். அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்தி­ருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக் கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது. (அல்குர்ஆன் 16:58,59)

இவ்வாறு பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தவர்கள் மறுமை நாளில் விசாரிக்கப்பட்டு, கடும் தண்டனை பெறுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது, (அல்குர்ஆன் 81:8,9)

பெண் பிள்ளைகளை பிறப்பதை விரும்பாதவர்களையும் அவர்களை உயிருடன் புதைத்தவர்களையும் கடுமையாகக் கண்டிக்கும் இஸ்லாம், சிரமங்களை ஏற்று, பெண் குழந்தைகளை ஒழுக்க மிக்கவர்களாக வளர்த்தால் நிச்சயம் அந்தப் பெற்றோருக்கு சுவனம் கிடைக்கும் என்று கூறுகிறது. எனவே பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் கவலையை மறந்து, நமது இந்தக் குழந்தைகள் மறுமை வெற்றியின் படிக்கற்கள் என்பதை நம்பி அவர்களை நல்ல முறையில் வாழ வைக்க முயற்சி செய்ய வேண்டும்.



Tuesday 19 February 2013

சந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம்



சந்தோசத்தைக் கெடுக்கும் சந்தேகம்

ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் தவறான எண்ணங்களும் சரியான எண்ணங்களும் ஏற்படுவது இயல்பான ஒன்றாகும். இதில் எது சரி? எது தவறு? என்பதைச் சிந்திக்க வேண்டும். அப்படி சிந்திக்காமல் செயல்படுபவர்கள் ஏராளம். இவ்வாறு செயல்படுபவர்களைப் பார்த்ததால்தான் கண் போன போக்கில் கால் போகலாமா? கால் போன போக்கில் மனம்
போகலாமா? மனம் போன போக்கில் மனிதன் போகலாமா? என்று பாட்டெழுதுகி றார்கள்.

மனம் போன போக்கில் போனதனால்தான் இன்றைக்கு பல பிரச்சினைகளை மனிதன் தன் நெஞ்சில் சுமக்கிறான். அதே அவனுக்கு மன நோய்களைத் தந்து கொண்டிருக்கிறது.

சந்தேகம் எனும் சாத்தான்

தெருவில் ஜோடியாக செல்லும் ஆணையும் பெண்ணையும் பார்த்தவுடன் பலருக்கும் பலவிதமான எண்ணங்கள் தோன்றுவதுண்டு அண்ணன் தங்கையாக இருப்பார்களா? அல்லது கணவன் மனைவியாக இருப்பார்களா என்று எண்ணுவதைவிட கள்ளக்காதல் ஜோடியாக இருப்பார்களா? என்று எண்ணுபவர்கள்தான் அதிகம்.

வேலைக்குச் செல்லும் கணவனுக்கு வேறொரு பெண்ணோடு தொடர்பு இருக்குமா?

நல்லவரான நம் கணவனை வேறு பெண்கள் தன் வலையில் சிக்க வைத்து விடுவார்களோ? என்று மனைவி சந்தேகம் கொள்கிறாள். கடையில் வேலைக்கு இருப்பவர் கல்லாப் பெட்டியில் கைவைத்திருப்பாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. கடையில் தொழிலாளி பொய் கணக்கு எழுதியிருப்பாரோ என்று முதலாளிக்கு சந்தேகம் ஏற்படுவதுண்டு.

பள்ளிவாசல் நிர்வாகம் செய்யக் கூடியவர்களைப் பார்த்து பைத்துல்மால் பணத்தை கையாடல் செய்திருப்பார்களா? நம்மைப் பற்றி ஏதாவது கூட்டாகப் பேசி சதி திட்டம் தீட்டியிருப்பார்களா? என்று பல தவறான எண்ணங்கள் பலரிடம் ஏற்படுகிறது.

கல்லூரிக்குச் செல்லும் பிள்ளை முறையாக செல்கிறானா? மார்க்கக் கல்வி கற்கச் செல்லும் முஸ்லிம் பெண்மணி அங்குதான் செல்கிறாளா? பக்கத்து வீட்டுப் பெண்மணி எங்கே போகிறாள்? எதற்காகப் போகிறாள்? யாரைப் பார்க்கப் போகிறாள்? இப்படி நாம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு காட்சிகளும் பேசப்படும் பேச்சுகளும் நடத்தைகளும் நமக்கு சந்தேகம் ஏற்படுத்தும். சந்தேகங்கள் அனைத்தும் உண்மையாகுமா? அல்லது இவ்வாறு சந்தேகப் படலாமா? திருக்குர்ஆன் கூறுவதைப் படியுங்கள்

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா?
அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.         அல்குர்ஆன் (49:06)

நாம் சந்தேகப்படுவதில் சிலது பாவங்களாகவும் இருக்கக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறிய மாட்டார்கள். எனவே எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்.
எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனும திக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே.
ஆதாரம் புகாரி (50)

நாம் சந்தேகப்படுவதில் சில விஷயங்கள் சரியானதாக இருக்கும். சில தீமைகளைத் தரக்கூடியதாக இருக்கும். அப்படியென்றால் நாம் எண்ணுவது நன்மையைத் தருமா? என்பதை எவ்வாறு தீர்மானிப்பது அதற்கு நபி(ஸல்) அவர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
ஆதாரம் இல்லாமல் யாரையும் நாம் சந்தேகம் கொள்ளக்கூடாது. பொதுவாக அனைவரையும் நல்லவராகவே எண்ண வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும். (பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருüன்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (6066)

மனதில் தவறாக கூறிவிட்டோமோ என்ற நெருடல் வந்துவிட்டால் அது பாவமான காரியமாகும் என்பதையும் மனதில் கொள்க.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நன்மை ("அல்பிர்ரு') மற்றும் தீமை ("அல்இஸ்மு') பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், "நன்மை என்பது நற்பண்பாகும். தீமை என்பது எந்தச் செயல் குறித்து உனது உள்ளத்தில் நெருடல் ஏற்படுவதுடன், அதை மக்கள் தெரிந்துகொள்வதை நீ வெறுப்பாயோ அதுவாகும்'' என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : நவ்வாஸ் பின் சம்ஆன் (ரலி, நூல் : முஸ்லிம் (4992)

நபி (ஸல்) அவர்கள் கூறிய படி நடந்து கொண்டால் நமது உள்ளமும் மனதும் தூய்மையாகும். நம்முடைய ஒவ்வொரு வெளிப்படையான செயலுக்கும் அடிப்படையாக அமைவது உள்ளமாகும். அதை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். நம் உடலில் உள்ள கை, கால், கண் போன்ற அனைத்தும் சரியாக இயங்குவதற்கும் தவறான வழியில் செல்வதற்கும் உள்ளமே மூல காரணமாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிக: உடரில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர் பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர் பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துகொள்ளுங்கள்: அதுதான் உள்ளம்.
அறிவிப்பவர் : நுஅமான் பின் பஷீர் (ரலி), நூல் : புகாரி:52





இணை கற்பிக்கும் பெண்கள்

இணை கற்பிக்கும் பெண்கள், ஆண்களை அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை நீங்கள் திருமணம் செய்யாதீர்கள் என்று குர்ஆன் (2:221) கூறுகின்றது. எங்கள் ஊரில் இறைவன் ஒருவன் என்று ஏற்றவர்கள் ஒரு சதவிகிதமும் தர்கா வழிபாடு, வரதட்சணை, வட்டி போன்றவற்றில் ஈடுபடுவோர் 99 சதவிகிதமும் உள்ளனர். இந்நிலையில் எங்களுடைய பெண்களுக்கு இந்த ஒரு சதவிகிதத்தில் மாப்பிள்ளை இல்லை. எனவே இணை வைக்கும் கொள்கையுடைவர்களிடத்தில் மாப்பிள்ளை பார்க்கலாமா?.

இணை வைப்பவர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்று அல்லாஹ் தெளிவாகக் கூறி விட்டான். எனவே எந்தக் காரணம் கூறியும் அதை நியாயப்படுத்த முடியாது.

நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று நீங்கள் அறிந்தால் அவர்களை (ஏக இறைவனை) மறுப்போரிடம் திருப்பி அனுப்பி விடாதீர்கள்! இவர்கள் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோர் அல்லர். அவர்கள் இவர்களுக்கு அனுமதிக்கப்பட்டோரும் அல்லர். அவர்கள் (இப்பெண்களுக்காக) செலவிட்டதை அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள்! அவர்களுக்குய (மணக்) கொடைகளை நீங்கள் வழங்கினால் அவர்களை நீங்கள் மணந்து கொள்வது உங்கள் மீது குற்றமில்லை. ஏக இறைவனை மறுக்கும் பெண்களுடன் (முன்னர் செய்த) திருமண ஒப்பந்தங்களைத் தொடராதீர்கள். நீங்கள் செலவிட்டதை நீங்கள் கேளுங்கள்! அவர்கள் செலவிட்டதை அவர்கள் கேட்கட்டும். இதுவே அல்லாஹ்வின் கட்டளை. உங்களுக்கிடையே அவன் தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன்
60:10)

நம்பிக்கை கொண்ட பெண்களுக்கு இணை கற்பிக்கும் மாப்பிள்ளைகள் ஹலால் இல்லை என்று இந்த வசனத்தில் கூறுகின்றான். இதற்குப் பிறகு எப்படி அவர்களிடம் திருமண உறவு வைத்துக் கொள்ள முடியும்? இணை கற்பிக்காத நிலையில் மற்ற தவறுகளைச் செய்யக் கூடியவர்கள் என்றால் அதைப் பரிசீலிக்கலாம். ஆனால் இணை கற்பிப்பவர் என்று தெளிவாக தெரிந்து அவர்களுக்குப் பெண் கொடுப்பது இறைவனின் கட்டளைக்கு மாற்றமான செயலாகும்.

இணை கற்பிக்கும் குடும்பங்களில் வாழ்க்கைப்படும் பெண்கள் தங்களது கொள்கையை விட்டு விட்டு கணவனின் மார்க்கத்தையே பின்பற்றும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள் என்பதை நிதர்சனமாகக் கண்டு வருகின்றோம். அதையும் மீறி கணவன் வீட்டில் தன் கொள்கையைப் பின்பற்றினால் அவளது வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். இது தான் யதார்த்தம்.

இவ்வாறிருக்கையில் அங்கு திருமணம் செய்து கொடுப்பது, அவர்களைத் தெரிந்தே நரகத்தில் தள்ளுவதைப் போன்றதாகும். இவ்வுலக வாழ்க்கையில் திருமணம் தாமதமாகின்றது என்பதை மட்டும் பார்த்து, அந்தப் பெண்ணுடைய மறுமை வாழ்க்கையை வீணாக்கி விடக் கூடாது.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தி னரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.
(அல்குர்ஆன்
66:6)

நம்மை மட்டுமல்லாது நமது குடும்பத்தினரையும் நரக நெருப்பிலிருந்து காக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை இந்த வசனம் தெளிவுபடுத்துகின்றது.
எனவே இணை கற்பிப்பவர்களுடன் கண்டிப்பாக திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது.

உள்ளூரில் மாப்பிள்ளை கிடைக்காத பட்சத்தில் வெளியூரில் திருமணம் முடித்துக் கொடுக்க வேண்டும்.

இது போன்ற நிலை ஏற்படுவதற்குக் காரணம், ஏகத்துவ வாதிகள் என்று கூறிக் கொள்வோர் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பெண்களை மணம் முடிக்காமல் மற்றவர்களைத் தேடிச் செல்வது தான். இத்தகையவர்கள் இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீர வேண்டும். 

Blogger Tips And Tricks|Latest Tips For Bloggers Free Backlinks

Popular Posts